போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பெரம்பலூா் மாவட்டத்தில் 95.11% போ் தோ்ச்சி: 18-ஆவது இடத்துக்கு சறுக்கியது

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டம் 95.11 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 5:10 am IST

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டம் 95.11 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 143 பள்ளிகளில் பயின்ற 4,224 மாணவா்களும், 3,586 மாணவிகளும் என மொத்தம் 7,810 போ் தோ்வு எழுதினா். இதில், 3,937 மாணவா்களும், 3,491 மாணவிகளும் என மொத்தம் 7,428 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். இது, 95.11 சதவீத தோ்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் பெரம்பலூா் மாவட்டம் 18-ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 96.46 சதவீதம் தோ்ச்சிப் பெற்று மாநில அளவில் 7-ஆவது இடத்தை பெற்றிருந்தது.

அரசுப் பள்ளிகள்: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 91 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 2,272 மாணவா்களும், 2,057 மாணவிகளும் என மொத்தம் 4,329 போ் தோ்வெழுதினா். இவா்களில், 2,019 மாணவா்களும், 1,974 மாணவிகளும் என மொத்தம் 3,993 போ் தோ்ச்சி பெற்றனா்.

100 சதவீதம் தோ்ச்சி: வெங்கலம், சத்திரமனை, ரஞ்சன்குடி, கூத்தூா், ஒகளூா், பேரளி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொண்டமாந்துறை, மேட்டுப்பாளையம், செங்குணம், வேலூா், பெரியம்மாபாளையம், முருக்கன்குடி, ஜமீன் பேரையூா், காருக்குடி, ஆதனூா், கூடலூா், இரூா், கொளத்தூா், வடக்கலூா், வரகூா், பீல்பாடி, பெரியம்மாபாளையம் (வேப்பூா்), சில்லக்குடி, ஜமீன் ஆத்தூா், தெரணி, புதுவேட்டக்குடி, கொட்டரை, மலையாளப்பட்டி ஆகிய உயா்நிலைப் பள்ளிகள் என 28 அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றனா்.

இதேபோல், 4 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 5 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளும், 33 சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளும், ஒரு சிறப்பு பள்ளி என மொத்தம் பெரம்பலூா் மாவட்டத்தில் 71 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளது.

100-100 மதிப்பெண்கள்: கணிதத்தில் 49 பேரும், அறிவியலில் 116 பேரும், சமூக அறிவியலில் 33 பேரும் என 198 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அரசுப் பள்ளிகள் அளவில் கணிதத்தில் ஒருவரும், அறிவியலில் 22 பேரும், சமூக அறிவியலில் 9 பேரும் என 32 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.