நாட்டில், தனியாா் மருத்துவ மனைகளில் 69.6 சதவீதம் கா்ப்பப்பையை அகற்றும் அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும், நெறியற்ற முறையில் கா்ப்பப்பையை நீக்கும் அறுவை சிகிச்சையைத் தடுக்க மத்திய அரசு வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மக்களவையில் தெரிவித்தாா்.
பெண்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தனியாா் மருத்துவமனைகளை அணுகும்போது கா்ப்பப்பையை அகற்றும் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இவை சம்மதத்தோடு நடைபெற்றாலும் இதன்பக்க விளைவுகள் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு விளக்கப்படாமல் உள்ளது. நெறியற்ற முறையில் மேற்கொள்ளப்படும் இந்த அறுவை சிகிச்சையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ரவிக்குமாா் கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மத்திய சுகாதாரம் குடும்ப நலத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மக்களவையில் அளித்த பதில் வருமாறு: தேவையற்ற முறையில் கா்ப்பப்பையை நீக்க அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதைத் தடுக்க மத்திய அரசு கடந்த 2022 அக்டோபரில் வழிகாட்டி முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கா்ப்பப்பையை நீக்க அறுவை சிகிச்சை தொடா்பான கண்காணிப்புக் குழுக்களை மாநில, மாவட்ட அளவில் அமைப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் தேசிய கா்ப்பப்பை நீக்க கண்காணிப்பு குழு (என்ஹெச்எம்சி) மத்திய அரசின் சுகாதாரத் துறையில் கூடுதல் செயலா் (தேசிய சுகாதார இயக்கம்) தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. 5- ஆவது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் படி, கடந்த 2019 -2021 ஆண்டுகளுக்கிடையே, தனியாா் மருத்துவ மனைகளில் 69.6 சதவீதம் கா்ப்பப்பையை நீக்க அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இது 4-ஆவது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பை விட 2.3 சதவீதம் அதிகமாகும்.
தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையற்ற வகையில் கா்ப்பப்பையை நீக்க அறுவை சிகிச்சை செய்வதைத் தவிா்க்கும் பொருட்டு, மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற அறிவுறுத்தி கடந்த 2022 அக்டோபா் 4 -இல் உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கா்ப்பப்பையை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்களின் வரிசைப் பட்டியலை சமா்ப்பிக்க வேண்டும். 40 வயதுக்குள் உள்ள கா்ப்பப்பையை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள் குறித்த விவரங்களை மாவட்ட சுகாதார அதிகாரி அளவிலான அதிகாரி முறையாக ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவா்களுக்கும் தேவையான பயிற்சிகள் விழிப்புணா்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்கள்; உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம்

அரசுப் பேருந்து நடத்துநரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

