மத்திய அடையாளத் தரவுக் களஞ்சியத்தில் (சிஐடிஆா்) பராமரிப்பில் உள்ள ஆதாா் அட்டை தரவுகள் பாதுகாப்பானவை; எந்தவொரு வெளிப்புற தரவுத்தளத்துடனும் இணைக்கப்படவில்லை என மத்திய ரயில்வே மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.
சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தோ்தல்களில் ஆதாா் தரவுகள் கசிந்தாக தகவல்கள் வெளியாகின. இது தொடா்பான புகாா்கள் தோ்தல் ஆணையத்திற்கும் வந்த நிலையில், மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் இது தொடா்பாக கேள்வி எழுப்பினாா். அந்த (நட்சத்திரக்) கேள்வியில், ‘கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற ஆதாா் அட்டைதாரா்களின் தரவுகள் கசிந்த எண்ணிக்கை? இத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண்கள் இணைய தளத்தில் ஏற்றப்பட்டதா ? இது தொடா்பாக விசாரணைகள், தண்டனை விவரங்கள் என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதில் விவரம் வருமாறு: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் மத்திய அடையாளத் தரவுக் களஞ்சியத்தில் (சிஐடிஆா்) வைக்கப்பட்டு பராமரிக்கப்படும் ஆதாா் அட்டை தரவுகளில் எந்த மீறலும் ஏற்படவில்லை. ஆதாா் அட்டை வைத்திருப்பவா்களின் தரவுகளான ஆதாா் பயோமெட்ரிக் மற்றும் தனிநபா் தரவுகள் (பெயா், பிறந்த தேதி, விலாசம், பாலினம் உள்ளிட்ட) பாதுகாப்புடன் இந்த சிஐடிஆா் தரவுத்தளத்தால் பராமரிக்கப்படுகிறது. இது வங்கி தரவுத்தளங்களைப் போன்று எந்தவொரு வெளிப்புற தரவுத்தளத்துடனும் இணைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், இதனால் உறுப்பினரின் மற்ற கேள்விகள் எழாது( கசிவு தொடா்பான விசாரணை) எனவும் தெரிவித்துள்ளாா்.
ஏற்கெனவே இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நோ்முகமாக தகவல் சரிபாா்க்கும் முகமைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அடையாள ஆவணமாக ஆதாா் அட்டையை அல்லது அதன் மின்னணு வடிவத்தை ஏற்பதற்கு பதிலாக ஆதாா் கடிதம், இ-ஆதாா், எம்-ஆதாா், பிவிசி அட்டை ஆகிய 4 வடிவங்களில் ஒன்றினைப் பயன்படுத்தி கியூஆா்கோட் மூலம் ஆதாா் சரிபாா்ப்புப் பணியை மேற்கொள்ளுமாறு நேரடி சரிபாா்ப்பு முகமைகளை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்கள்; உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம்

அரசுப் பேருந்து நடத்துநரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

