தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மேகாலயா: அதிரடி வாக்குறுதிகளுடன் வெளியானது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

மேகாலயத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிடு காங்கிரஸ் கட்சி சாரபில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

News image

மேகாலயா: அதிரடி திட்டங்களுடன் வெளியானது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

Updated On :9 பிப்ரவரி 2023, 12:40 pm

ஷில்லாங்: மேகாலயத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிடு காங்கிரஸ் கட்சி சாரபில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

பிப்ரவரி 27ஆம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் மாதம் 3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தனியாக பிள்ளைகளை வளர்க்க சிரமப்படும் பெண்களுக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.36,000 கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாக இருக்கும் பெண்கள் பெரும்பாலும் படிக்காதவர்களாகவும், ஏழ்மை நிலையிலும் இருப்பதால் அவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது.

மேகாலயத்தில் குழந்தை திருமணம் மற்றும் சிறு வயதில் குழந்தைப்பேறு ஆகியவையும் அதிகமாக உள்ளது. 

மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயத்தில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படாததால், மாநில இளைஞர்கள் தில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற்படுகிறது. எனவே, மேகாலயத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு வேலை வழங்குவதே எங்களது இலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலத்தில் உள்ள வீடு மற்றும் கடைகளுக்கு தடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.