2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சீரியல் கில்லர் அட்டூழியமா? 72 மணி நேரத்தில் 3 காவலாளிகள் கொலை; ஒருவர் கவலைக்கிடம்

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கடந்த 72 மணி நேரத்தில் மூன்று காவலாளிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

News image
சீரியல் கில்லர் அட்டூழியமா? 72 மணி நேரத்தில் 3 காவலாளிகள் கொலை; ஒருவர் கவலைக்கிடம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:12 am

PTI

சாகர்: மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கடந்த 72 மணி நேரத்தில் மூன்று காவலாளிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், மக்கள் அனைவரும் இது சீரியல் சில்லரின் அட்டூழியமா அல்லது சைக்கோ கில்லரின் வேலையா என்று அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சாகர் மாவட்டத்தில் நான்கு காவலாளிகள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த 3 கொலைகள் மட்டும் 72 மணி நேரத்தில் நடந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து காவலர்கள் கூறுகையில், கட்டடத்துக்கு வெளியே உறங்குவர்கள்தான் கொலையாளியின் குறியாக இருக்கிறார்கள். கொலைக்கு சுத்தி, பெரிய கல் போன்றவை பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

முதல் காவலாளி, தொழிற்சாலைக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த போது சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது சம்பவம், கல்லூரி வாயிலில் பணியில் இருந்த காவலாளி மிகப்பெரிய கல்லைக் கொண்டு தாக்கிக் கொலை செய்யப்பட்டார். புதன்கிழமை இரவு மற்றொரு காவலாளி மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மண்டை ஓடு உடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கு முன்பு, கடந்த மே மாதம் மக்ரோனியா ரயில் நிலைய மேம்பாலத்துக்குக் கீழே உறங்கிக் கொண்டிருந்த மற்றொரு காவலாளி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து கொலையாளியைத் தேடி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.