டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பெங்களூரு பயங்கரம்: பாட்டில்களில் பிறந்தகுழந்தைகள், பிறக்காத சிசுக்களின் உடல்கள்

பெங்களூரு அடுத்த பெலகாவி பகுதியில்,  புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் 4 உடல்களும், பிறக்காத சிசுக்களின் 3 உடல்களும் பாட்டில்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image
பெங்களூரு பயங்கரம்: பாட்டில்களில் பிறந்தகுழந்தைகள், பிறக்காத சிசுக்களின் உடல்கள்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:37 am

ANI


பெலகாவி: பெங்களூரு அடுத்த பெலகாவி பகுதியில்,  புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் 4 உடல்களும், பிறக்காத சிசுக்களின் 3 உடல்களும் பாட்டில்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த உடல்கள், குப்பிகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதில் ஒரு 5 மாதக் கரு ஒன்று, கருவில் இருக்கும் போதே பாலினம் கண்டுறியப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அதிகாரி டாக்டர் மகேஷ் கேனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பலதுறை நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த சிசுக்களின் உடல்கள் மருத்துவமனையில் சேமிக்கப்பட்டு, பிறகு மாவட்ட அறிவியல் பரிசோதனை மையங்களுக்கு உரிய பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.