டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இந்திய எல்லைப் பகுதிக்கு அருகே பறந்துச் சென்ற சீன போர் விமானம்

கிழக்கு லடாக் செக்டாருக்கு மிக நெருக்கமாக சீன விமானப் படை போர் விமானம் ஒன்று கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் பறந்துச் சென்றுள்ளது.

News image
இந்திய எல்லைப் பகுதிக்கு அருகே வந்துச் சென்ற சீன போர் விமானம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:45 am

ANI

புது தில்லி: இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு அருகே, கிழக்கு லடாக் செக்டாருக்கு மிக நெருக்கமாக சீன விமானப் படை போர் விமானம் ஒன்று கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் பறந்துச் சென்றுள்ளது.

நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின்படி, இதற்கு, இந்திய விமானப் படை உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.

இந்த சம்பவம், கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றுள்ளது. இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே சீன போர் விமானம் ஒன்றை ராணுவ வீரர் பார்த்துள்ளார். எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணிக்காக வைக்கப்பட்டுள்ள ரேடாரிலும் அந்த போர் விமானம் சிக்கியது என்று ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.

வான்வழி விதிமுறை மீறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதும், இந்திய விமானப் படை, நிலையான செயல்பாட்டு விதிமுறைகளின்படி நடவடிக்கையை துரிதப்படுத்தியதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

இது நடைபெற்ற போது, சீன எல்லைப் பகுதியில், போர் விமானங்கள் மற்றும் விமானப் படை போர்க் கருவிகளைக் கொண்டு மிகப்பெரிய போர்ப் பயிற்சி நடைபெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவிடம் ஏராளமான போர் ஜெட் விமானங்களும், ஆளில்லா போர் விமானங்களும் இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே நிறுத்தப்பட்டுள்ளன. 

போர் விமானம் இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே பறந்து சென்றது குறித்து சீன அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அதன்பிறகு அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது கவலைகொள்ள வேண்டிய அளவுக்கு ஒன்றுமில்லை என்றாலும், இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதற்காக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.