தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்திய எல்லைப் பகுதிக்கு அருகே பறந்துச் சென்ற சீன போர் விமானம்

கிழக்கு லடாக் செக்டாருக்கு மிக நெருக்கமாக சீன விமானப் படை போர் விமானம் ஒன்று கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் பறந்துச் சென்றுள்ளது.

News image

இந்திய எல்லைப் பகுதிக்கு அருகே வந்துச் சென்ற சீன போர் விமானம்

Updated On :9 ஜூலை 2022, 7:57 am

புது தில்லி: இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு அருகே, கிழக்கு லடாக் செக்டாருக்கு மிக நெருக்கமாக சீன விமானப் படை போர் விமானம் ஒன்று கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் பறந்துச் சென்றுள்ளது.

நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின்படி, இதற்கு, இந்திய விமானப் படை உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.

இந்த சம்பவம், கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றுள்ளது. இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே சீன போர் விமானம் ஒன்றை ராணுவ வீரர் பார்த்துள்ளார். எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணிக்காக வைக்கப்பட்டுள்ள ரேடாரிலும் அந்த போர் விமானம் சிக்கியது என்று ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.

வான்வழி விதிமுறை மீறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதும், இந்திய விமானப் படை, நிலையான செயல்பாட்டு விதிமுறைகளின்படி நடவடிக்கையை துரிதப்படுத்தியதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

இது நடைபெற்ற போது, சீன எல்லைப் பகுதியில், போர் விமானங்கள் மற்றும் விமானப் படை போர்க் கருவிகளைக் கொண்டு மிகப்பெரிய போர்ப் பயிற்சி நடைபெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவிடம் ஏராளமான போர் ஜெட் விமானங்களும், ஆளில்லா போர் விமானங்களும் இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே நிறுத்தப்பட்டுள்ளன. 

போர் விமானம் இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே பறந்து சென்றது குறித்து சீன அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அதன்பிறகு அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது கவலைகொள்ள வேண்டிய அளவுக்கு ஒன்றுமில்லை என்றாலும், இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதற்காக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.