டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆப்கனில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:44 am

ANI

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

கிழக்கு நங்கர்ஹார், நூரிஸ்தான் மற்றும் கானி மாகாணங்கள் மற்றும் நாட்டின் வடக்கே பர்வானில் அதிக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் பதிவாகியுள்ளன என்று ஜநா மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. 

ஜூலை 5, 6 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் 280-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அத்துடன் 4 பாலங்கள் மற்றும் 8 சாலை உள்பட 9 மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

ஜூன் மாதத்தில் 2 நாள்கள் பெய்த கனமழையில் 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 131 பேர் காயமடைந்தனர். ஒரே மாதத்திற்குள் கிழக்கு பிராந்தியத்தில் திடீர் வெள்ளம் ஏற்படுவது இது 2-வது முறையாகும். 

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, நூரிஸ்தான் மாகாணத்தில், குனார் முதல் நூரிஸ்தானின் மையப்பகுதி வரையிலான சாலை போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.