தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்: 9 பேர் பலி; சிறுமி மீட்பு

தேலா ஆற்றின் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில், அதில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது  பேர் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

News image

வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்: 9 பேர் பலி; சிறுமி மீட்பு

Updated On :8 ஜூலை 2022, 5:45 am

நைனிடால்:  உத்தரகண்ட் மாநிலம் ராம்நகர் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை, தேலா ஆற்றின் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில், அதில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது  பேர் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த கோர விபத்து இன்று அதிகாலை 5 மணியளவில் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரிலிருந்து இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடுமையான வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வெள்ளத்துக்குள் சிக்கியிருக்கும் காரிலிருந்து மற்ற உடல்களை மீட்க முடியாமல் மீட்புக் குழுவினர் தத்தளித்து வருகிறார்கள்.

இது குறித்து காவல்துறை உதவி ஆய்வாளர் கூறுகையில், தேலா ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் 9 பேர் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். காரிலிருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. 5 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.