தில்லியில் கரோனா பாதிப்பு ஒரே நாளில் இரண்டு மடங்கானதா?
தலைநகர் தில்லியில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு இரண்டு மடங்காகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் எடுத்திருக்கும் நிலையில், தலைநகர் தில்லியில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு இரண்டு மடங்காகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அச்சப்பட ஒன்றும் இல்லை. நேற்று புது தில்லியில் ஐந்து பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றோ பத்து பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புது தில்லயில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 0.41 சதவீதமாக உள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 32 ஆகவும், 18 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கரோனாவிலிருந்த குணமடைந்துவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...