கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கரோனா தடுப்புக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: பசவராஜ் பொம்மை

அரசு பரிந்துரைக்கும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

News image
கரோனா தடுப்புக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: பொம்பை
Updated On :1 பிப்ரவரி 2024, 11:10 am

PTI

கரோனா பாதிப்பும், ஒமைக்ரான் பாதிப்பும் ஒரு சில நாடுகளில் வேகமாகப் பரவிவரும் நிலையில், அரசு பரிந்துரைக்கும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கரோனா நிலைமை மற்றும் மாநிலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில், நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அவரசக் கூட்டம் நடத்தப்பட்டது. 

இதுதொடர்பாக பொம்மை கூறுகையில், 

கரோனா சென்றுவிட்டது என்று நிம்மதியாக இருந்த நிலையில், அது மற்ற நாடுகளில் மோசமாகிவருவது கவலைக்குரியது. 

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை விட வைரஸ்கள் வேகமாக நகரும் என்பதால், மாநில மற்றும் மத்திய அரசுகள் இதைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது. 

தற்போதைய சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பூஸ்டர் டோஸ் செலுத்த நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் முதல் மற்றும் இரண்டாவது டோஸில் காட்டப்பட்ட ஆர்வம் பூஸ்டர் டோஸில் காணப்படவில்லை. இது நாடு முழுவதும் நடந்துள்ளது. 

பூஸ்டர் டோஸிற்கும் முக்கியத்துவம் கொடுப்போம். மாநில மக்களின் ஒத்துழைப்பையும் கோருகிறேன். தடுப்பூசியின் முதல் இரண்டு டோஸ்களை நூறு சதவீதம் வெற்றிகரமாக முடித்துள்ளோம், ஆனால் பூஸ்டர் டோஸ் 20 சதவீத மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை இங்குள்ள சட்டப்பேரவையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மக்கள் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக, மாநிலம் முழுவதும் இதுபோன்ற தடுப்பு முகாம்களை நடத்துவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.