தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா தடுப்புக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: பசவராஜ் பொம்மை

அரசு பரிந்துரைக்கும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

News image

கரோனா தடுப்புக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: பொம்பை

Updated On :22 டிசம்பர் 2022, 12:49 pm

கரோனா பாதிப்பும், ஒமைக்ரான் பாதிப்பும் ஒரு சில நாடுகளில் வேகமாகப் பரவிவரும் நிலையில், அரசு பரிந்துரைக்கும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கரோனா நிலைமை மற்றும் மாநிலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில், நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அவரசக் கூட்டம் நடத்தப்பட்டது. 

இதுதொடர்பாக பொம்மை கூறுகையில், 

கரோனா சென்றுவிட்டது என்று நிம்மதியாக இருந்த நிலையில், அது மற்ற நாடுகளில் மோசமாகிவருவது கவலைக்குரியது. 

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை விட வைரஸ்கள் வேகமாக நகரும் என்பதால், மாநில மற்றும் மத்திய அரசுகள் இதைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது. 

தற்போதைய சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பூஸ்டர் டோஸ் செலுத்த நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் முதல் மற்றும் இரண்டாவது டோஸில் காட்டப்பட்ட ஆர்வம் பூஸ்டர் டோஸில் காணப்படவில்லை. இது நாடு முழுவதும் நடந்துள்ளது. 

பூஸ்டர் டோஸிற்கும் முக்கியத்துவம் கொடுப்போம். மாநில மக்களின் ஒத்துழைப்பையும் கோருகிறேன். தடுப்பூசியின் முதல் இரண்டு டோஸ்களை நூறு சதவீதம் வெற்றிகரமாக முடித்துள்ளோம், ஆனால் பூஸ்டர் டோஸ் 20 சதவீத மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை இங்குள்ள சட்டப்பேரவையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மக்கள் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக, மாநிலம் முழுவதும் இதுபோன்ற தடுப்பு முகாம்களை நடத்துவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.