ஒடிசாவில் லேசான நிலநடுக்கம்!
ஒடிசாவின் கஜப்தி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஒடிசாவின் கஜப்தி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
இந்த நிலநடுக்கம் காலை 9.46 மணிக்கு 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 3.4 அலகுகளாகப் பதிவானதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் புவனேஸ்வரில் இருந்து 277 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இந்த நிலநடுக்கம் பர்லாகேமுண்டி நகரத்திலும் கஜபதி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டது.
இது கஞ்சம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா நகரமான தப்தபானியிலும் உணரப்பட்டது என்று ஐஎம்டி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...