தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சுகாதாரம், கல்வியை மேம்படுத்த மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றத் தயார்: கேஜரிவால்

தில்லி அரசின் மாதிரியைப் பயன்படுத்தி உலகின் முதல் நாடாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:04 am

PTI

இந்தியா முழுவதும் பள்ளிக் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் தில்லி அரசின் மாதிரியைப் பயன்படுத்தி உலகின் முதல் நாடாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். 

இலவச கல்வி மற்றும் சுகாதார வசதிகளை "இலவசம்"  என்று கூற வேண்டாம் என்றும் பாஜ தலைமையிலான மத்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். 

கேஜரிவால் மக்களை அதிகாரத்திற்காக சிக்கவைக்கும் ஒரு தூண்டிலாக இலவசங்களைப் பயன்படுத்தி வருவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளதால் அரசியல் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் உத்தரப் பிரதேசத்தில் புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்த பிறகு, வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வழங்கும் ‘ரெவ்டி கலாசாரம்’ உருவாகி வருவதாகவும் இது நாட்டின் வளா்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என்றும் கூறியிருந்தாா்.

வாக்காளா்களை கவருவதற்காக சில கட்சிகள் வாக்குறுதி அளித்து வரும் இலவசங்கள் விஷயத்தில் பொதுமக்கள், குறிப்பாக இளைஞா்கள் இதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவா் கூறியிருந்தார்.

சுகாதார சேவைகள் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். 

அவற்றை இலவசங்கள் என்று அழைப்பதை நிறுத்துமாறும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று செய்தியாளர் கூட்டத்தில் கேஜரிவால் கூறினார். 

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அரசுப் பள்ளிகளைப் பெரியளவில் திறந்து, மேம்படுத்தி, ஆசிரியர்களை முறைப்படுத்த, ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்.

அப்போது தான் இந்தியா "பணக்கார நாடாக" மாற முடியும் என்று ஆம் ஆத்மி முதல்வர் தெரிவித்துள்ளார். 

இதையெல்லாம் ஐந்து வருடத்தில் செய்துவிடலாம். இதை நாங்கள் செய்துள்ளோம்.

அரசுப் பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த தில்லியின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து மாநில அரசுகளும் இணைந்து செயல்பட முடியும் என்றும் கேஜரிவால் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.