டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கழிப்பறையை விடச் சின்ன அலுவலகத்தில் ரூ.1,764 கோடி வணிகம்

கழிப்பறையை விட சின்ன அலுவலகத்தில் இன்று சோதனை நடத்திய மகாராஷ்டிர ஜிஎஸ்டி துறை அதிகாரிகளுக்கு இவ்வளவுப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.

News image
கழிப்பறையை விடச் சின்ன அலுவலகத்தில் ரூ.1,764 கோடி வணிகம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:03 am

IANS

மும்பை: கழிப்பறையை விட சின்ன அலுவலகத்தில் இன்று சோதனை நடத்திய மகாராஷ்டிர ஜிஎஸ்டி துறை அதிகாரிகளுக்கு இவ்வளவுப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.

மும்பையில் ஜாவேரி பஜார் பகுதியில் கழிப்பறையை விடவும் சிறிய 35 சதுர பரப்பளவு கொண்ட அலுவலகத்தில் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, ரூ.10 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்திருப்பதோடு, அந்த அலுவலகத்தின் டர்ன்ஓவர் எனப்படும் விற்றுமுதல் ரூ.1,764 கோடி என்பதை கண்டறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜிஎஸ்டி துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சாமுண்டா என்பவருக்குச் சொந்தமான தெற்கு மும்பையின் ஜாவேரி பஜார் பகுதியில் உள்ள அலுவலகம் மற்றும் சில இடங்களில் கடந்த 16ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

இதில், வணிக நிறுவனமாக பதிவு செய்யப்படாத சில இடங்களும் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில், 20ஆம் தேதி, கழிப்பறையை விடவும் மிகச் சிறிய அலுவலகம் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது. அங்கே ரூ.9.78 கோடி பணம் 13 லட்சம் மதிப்புள்ள 19 கிலோ வெள்ளிக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. அவை அனைத்தும், அலுவலக சுவற்றிலும், தரைப்பகுதியிலும் புதைத்துவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மாநில ஜிஎஸ்டி துறையினர், சாமுண்டா புல்லியன் வங்கிக் கணக்குகளையும், நிறுவனத்தின் கணக்குகளையும் ஆராய்ந்த போது அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அதாவது, இந்தநிறுவனத்தின் விற்றுமுதல் 2019-20ல் ரூ.22.83 கோடியாகவும், 2020-21ல் ரூ.652 கோடியாகவும் 2021 - 22ல் ரூ.1764 கோடியாகவும் அதிகரித்திருப்பது தெரிய வந்தது.

உடனடியாக அந்த அலுவலகம் சீல்வைக்கப்பட்டு வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.