தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கழிப்பறையை விடச் சின்ன அலுவலகத்தில் ரூ.1,764 கோடி வணிகம்

கழிப்பறையை விட சின்ன அலுவலகத்தில் இன்று சோதனை நடத்திய மகாராஷ்டிர ஜிஎஸ்டி துறை அதிகாரிகளுக்கு இவ்வளவுப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.

News image

கழிப்பறையை விடச் சின்ன அலுவலகத்தில் ரூ.1,764 கோடி வணிகம்

Updated On :23 ஏப்ரல் 2022, 11:00 am

மும்பை: கழிப்பறையை விட சின்ன அலுவலகத்தில் இன்று சோதனை நடத்திய மகாராஷ்டிர ஜிஎஸ்டி துறை அதிகாரிகளுக்கு இவ்வளவுப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.

மும்பையில் ஜாவேரி பஜார் பகுதியில் கழிப்பறையை விடவும் சிறிய 35 சதுர பரப்பளவு கொண்ட அலுவலகத்தில் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, ரூ.10 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்திருப்பதோடு, அந்த அலுவலகத்தின் டர்ன்ஓவர் எனப்படும் விற்றுமுதல் ரூ.1,764 கோடி என்பதை கண்டறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜிஎஸ்டி துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சாமுண்டா என்பவருக்குச் சொந்தமான தெற்கு மும்பையின் ஜாவேரி பஜார் பகுதியில் உள்ள அலுவலகம் மற்றும் சில இடங்களில் கடந்த 16ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

இதில், வணிக நிறுவனமாக பதிவு செய்யப்படாத சில இடங்களும் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில், 20ஆம் தேதி, கழிப்பறையை விடவும் மிகச் சிறிய அலுவலகம் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது. அங்கே ரூ.9.78 கோடி பணம் 13 லட்சம் மதிப்புள்ள 19 கிலோ வெள்ளிக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. அவை அனைத்தும், அலுவலக சுவற்றிலும், தரைப்பகுதியிலும் புதைத்துவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மாநில ஜிஎஸ்டி துறையினர், சாமுண்டா புல்லியன் வங்கிக் கணக்குகளையும், நிறுவனத்தின் கணக்குகளையும் ஆராய்ந்த போது அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அதாவது, இந்தநிறுவனத்தின் விற்றுமுதல் 2019-20ல் ரூ.22.83 கோடியாகவும், 2020-21ல் ரூ.652 கோடியாகவும் 2021 - 22ல் ரூ.1764 கோடியாகவும் அதிகரித்திருப்பது தெரிய வந்தது.

உடனடியாக அந்த அலுவலகம் சீல்வைக்கப்பட்டு வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.