மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஜனவரி 16-ல் கரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 1,91,73,383 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில்,
நேற்று ஒரேநாளில் 3,16,506 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட1,37,186 பேர் இரண்டாவது டோஸையும், 99,178 பேர் முதல் டோஸைப் பெற்றனர்.
நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, மாநில அரசு 18-44 வயதுக்குள்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மேலும் இருப்பு இருக்கக்கூடிய கரோனா தடுப்பூசி 45 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்தப்படும் என்று கூறினார்.
சுகாதாரப் பணியாளர்களில், இதுவரை 11,38,242 பேர் முதல் டோஸையும் 6,89,134 இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர். மேலும், 15,51,670 முன்னணி தொழிலாளர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது, 6,79,527 பேர் இரண்டு டோஸையும் பெற்றுள்ளனர்.
18-44 வயதுக்குள்பட்ட 6,27,281 பேர் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.
முன்னதாக 45 வயதிற்குள்பட்டவர்களில், தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 1,20,31,019 பேர் முதல் டோஸையும், 24,56,510 பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.
சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் புதன்கிழமை கூறியதாவது,
மே 20 முதல் மாநிலத்திற்கு அதிக அளவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பிறகு கரோனா தடுப்பூசி தடையில்லாமல் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோா் பாஜகவை வீழ்த்த வேண்டும்’: கேஜரிவால் பிரசாரம்

சித்திரைத் திருவிழாவுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை! - மருத்துவா் பா.சரவணன்

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடி வெளியேற்றம்: அமித் ஷா!

மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம் புதுச்சேரி ஆட்சியா் மரியாதை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


