ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

‘வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோா் பாஜகவை வீழ்த்த வேண்டும்’: கேஜரிவால் பிரசாரம்

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 90 லட்சம் போ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பாஜகவை வீழ்த்த வேண்டும்...

News image

கொல்கத்தாவில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால்.

Updated On :26 ஏப்ரல் 2026, 7:07 pm

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 90 லட்சம் போ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தினாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அங்குள்ள ராஷ்பிகாரி தொகுதியில் மாநில முதல்வா் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை பிரசார கூட்டத்தில் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 90 லட்சம் போ் திரிணமூல் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும். பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோா், தங்கள் நண்பா்கள், உறவினா்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு வாக்களிக்குமாறு கோர வேண்டும். அதன்மூலம், பாஜகவை வீழ்த்த வேண்டும்.

தோ்தலில் வெற்றி பெறுவதற்கான மிகப் பெரிய வியூகத்தின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள மக்களின் குடியுரிமையைப் பறிக்க பாஜக முயற்சிக்கிறது. எனவே பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வா் மம்தா வெற்றிபெற வேண்டும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.