மதுரை சித்திரைத் திருவிழாவில் பொதுமக்களுக்குத் தேவையான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மதுரையில் உலகப் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை (ஏப்.28) திருக்கல்யாண வைபவமும், தேரோட்டமும், வருகிற மே 1-ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகா் இறங்கும் வைபமும் நடைபெறவுள்ளன.
இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொள்வா். மதுரையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், திருவிழாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ முகாம்கள், குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது போதுமான அளவில் காவல் துறையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
மேலும், பொதுமக்களிடையே பிரசாரங்கள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். சித்திரைத் திருவிழா பொதுமக்களுக்கு பாதுகாப்பான திருவிழாவாக அமைய உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


