ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அசாமில் 15 நாள்களுக்கு அலுவலகங்கள் மூட உத்தரவு

அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அலுவலகங்கள், மத இடங்கள் மற்றும் வாராந்திர சந்தைகளை மூடுமாறு அசாம் அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

News image

அசாமில் 15 நாள்களுக்கு அலுவலகங்கள் மூட உத்தரவு

Updated On :12 மே 2021, 8:15 am

அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அலுவலகங்கள், மத இடங்கள் மற்றும் வாராந்திர சந்தைகளை மூடுமாறு அசாம் அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

நாட்டில் அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகளும், புதிய வழிகாட்டுதல்களையும் தலைமைச் செயலாளர் ஜிஷ்ணு பாருவா வெளியிட்டுள்ளார். 

அதன்படி, நகர்ப்புறங்களில் உள்ள தனித்தனி கடைகள், வணிக நிறுவனங்கள், அனைத்து நாள்களிலும் பிற்பகல் 1 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், பஜார்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அடுத்த 15 நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள், சட்ட அமலாக்கச் சேவைகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது. திருமணம், இறுதிச்சடங்கு ஆகிய சடங்குகளில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.