மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கரோனா பேரிடரை சமாளிக்க ராணுவ உதவி கோரும் தில்லி அரசு

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான பணிகளை மேற்கொள்ள ராணுவ உதவி தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு தில்லி அரசு கோரிக்கை வைத்துள்ளது.

News image
கரோனா பேரிடரை சமாளிக்க ராணுவ உதவி கோரும் தில்லி அரசு
Updated On :27 ஜனவரி 2024, 8:09 pm

IANS


புது தில்லி: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான பணிகளை மேற்கொள்ள ராணுவ உதவி தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு தில்லி அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தில்லியில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 10,000 படுக்கை வசதிகளும், 1000 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளையும் கொண்ட மருத்துவமனைகளை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்த ராணுவ வீரர்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக, சுகாதாரத் துறை கடும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படுக்கை வசதிகளை ஏற்படுத்த ராணுவத்தை அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் மணீஷ் சிசோடியா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.