பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கரோனா பேரிடரை சமாளிக்க ராணுவ உதவி கோரும் தில்லி அரசு

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான பணிகளை மேற்கொள்ள ராணுவ உதவி தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு தில்லி அரசு கோரிக்கை வைத்துள்ளது.

News image

கரோனா பேரிடரை சமாளிக்க ராணுவ உதவி கோரும் தில்லி அரசு

Updated On :3 மே 2021, 10:48 am


புது தில்லி: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான பணிகளை மேற்கொள்ள ராணுவ உதவி தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு தில்லி அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தில்லியில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 10,000 படுக்கை வசதிகளும், 1000 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளையும் கொண்ட மருத்துவமனைகளை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்த ராணுவ வீரர்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக, சுகாதாரத் துறை கடும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படுக்கை வசதிகளை ஏற்படுத்த ராணுவத்தை அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் மணீஷ் சிசோடியா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.