சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் சானிடைசர் குடித்து 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
கோல் பஜார் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கரோனா பரவல் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானம் கிடைக்காத நான்கு பேர் சானிடைசரை உட்கொண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நால்வரும், டாக்டர் பி.ஆர் அம்பேக்தர் நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் ராஜூ சூரா மற்றும் விஜய் குமார் சௌகான் ஆகிய இருவருமே 40 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


