கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலிருந்து தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் பிரசாத் விலகியுள்ளார்.

News image
இரட்டை இலைச் சின்ன வழக்கிலிருந்து நீதிபதி விலகல்
Updated On :27 ஜனவரி 2024, 7:38 pm

DIN


புது தில்லி: அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலிருந்து தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் பிரசாத் விலகியுள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தோ்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுப்ரமணியன் பிரசாத், வழக்கு விசாரணையிலிருந்து விலகியுள்ளார்.

இதனால் இந்த வழக்கு விசாரணை மார்ச் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தோ்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரைச் சோ்ந்த சுகேஷ் சந்திரசேகரை தில்லி குற்றப் பிரிவு போலீஸாா் 2017-இல் கைது செய்து, அது தொடர்பான வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.