/

ஆந்திர மாநில கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிக்கை வெளியீடு

ஆந்திர மாநில கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

News image

ஆந்திர மாநில கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிக்கை வெளியீடு

Updated On :23 ஜனவரி 2021, 7:16 am


அமராவதி: ஆந்திர மாநில கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆந்திர மாநில கிராமப் பஞ்சாயத்தின் முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த முதல் கட்ட தேர்தல் 11 மாவட்டங்களுக்கு உள்பட 146 வருவாய் மண்டலங்களில் நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் நிம்மகட்டா ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வது மாநில அரசின் கடமை என்றும், தேர்தல் நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் ஆளுநருக்கு தகவல் அளிப்போம் என்றும் ரமேஷ் குமார் கூறியுள்ளார்.

முதல்கட்டமாக, ஆந்திர மாநில கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் விசயநகரம் மற்றும் பிரகாசம் மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில் மட்டும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.