/

இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசி கோரும் 25 நாடுகள்: ஜெய்சங்கர்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி மருந்துகள் இதுவரை 15 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் மேலும் 25 நாடுகள் காத்திருப்பதாக மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்

News image

இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசி கோரும் 25 நாடுகள்: ஜெய்சங்கர்

Updated On :6 பிப்ரவரி 2021, 9:26 am


அமராவதி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி மருந்துகள் இதுவரை 15 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் மேலும் 25 நாடுகள் காத்திருப்பதாக மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது பற்றி அவர் கூறுகையில், இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசி கோரும் நாடுகள் மூன்று வகைகளாக உள்ளன. ஒன்று, ஏழை நாடுகள், தடுப்பூசியின் விலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் நாடுகள் போன்றவை.

தற்போதைய நிலையில், இந்தியா இதுவரை 15 உலக நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளது. அதேவேளையில், மேலும் 25 நாடுகள், இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசியைப் பெறும் நடவடிக்கையின் பல்வேறு கட்டப் பணிகளில் உள்ளன. 

தற்போது இந்தியா எதை செய்து முடித்திருக்கிறதோ, அதன் அடிப்படையில், உலக வரைபடத்தில் இந்தியா முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று ஒரு கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.