/

நாட்டில் புதிதாக 11,039 பேருக்கு கரோனா பாதிப்பு

நாட்டில் புதிதாக 11,039 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 1,07,77,284 ஆக உயர்ந்துள்ளது. 

News image

நாட்டில் புதிதாக 11,039 பேருக்கு கரோனா பாதிப்பு

Updated On :3 பிப்ரவரி 2021, 4:59 am

புது தில்லி: நாட்டில் புதிதாக 11,039 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 1,07,77,284 ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 11,039 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,07,77,284-ஆக அதிகரித்தது.

கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,04,62,631-ஆக அதிகரித்தது.

கரோனா தொற்றுக்கு மேலும் 110 போ் உயிரிழந்தனா். 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்திருந்த நிலையில் இன்று 110 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,596-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 15-ஆவது நாளாக 2 லட்சத்துக்கும் கீழ் உள்ளது.

நாடு முழுவதும் 1,60,057 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதாவது கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 1.49 சதவீதம் போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 19.84 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 7,21,121 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.