/

தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

விவசாயிகளின் தொடர் பேரணி காரணமாக ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்துக்கான தில்லியின் எல்லைகள் திங்கள்கிழமை பல இடங்கள் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:55 am

விவசாயிகளின் தொடர் பேரணி காரணமாக ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்துக்கான தில்லியின் எல்லைகள் திங்கள்கிழமை பல இடங்கள் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லைகளில் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடும் பாதுகாப்புப் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தில்லி போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து பாதிப்புக்குள்ளான பகுதிகள் குறித்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து மாற்று வழிகளைப் பரிந்துரைத்து வருகின்றது. எல்லையை மூடுவதால் ஐ.எஸ்.பி.டி ஆனந்த் விஹார் முதல் காசிப்பூர் வரை சாலை எண்.56 இல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

பரிந்துரைக்கப்பட்ட மாற்றுவழிகள் காலை 10 மணிக்கு முதல் திறக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 9, தேசிய நெடுஞ்சாலை எண் 24, உ.பி. வாயிலிலிருந்து காசியாபாத், மீரட் மற்றும் ஹப்பூர் நோக்கி திறக்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் ஹோஷியார் சிங், பகதூர்கர் சிட்டி, பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா மற்றும் திக்ரி எல்லை நிலையங்களின் நுழைவு / வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் கழகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.