பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஆந்திரத்தில் பள்ளிகள் திறப்பு; 40-50% மாணவர்கள் வருகை

ஆந்திர மாநிலத்தில், கரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

News image

ஆந்திரத்தில் பள்ளிகள் திறப்பு; 40-50% மாணவர்கள் வருகை

Updated On :16 ஆகஸ்ட் 2021, 9:36 am


விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில், கரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

வழக்கமாக ஆந்திர மாநிலத்தில் ஜூன் 12ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று கடுமையான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

அரசின் விதிமுறைப்படி, ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் பள்ளியின் வகுப்பறைகளை அதிகரிப்பது அல்லது பகுதிநேரமாக மாற்றுவது போன்றவற்றை பள்ளி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்து, இன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், வெறும் 40 முதல் 50 சதவீத மாணவ, மாணவிகளே பள்ளிகளுக்கு வருகை தந்திருந்தனர். பள்ளியின் நுழைவு வாயில்களில் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமிநாசினி வழங்கப்பட்டு, சமுக இடைவெளியுடன் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்களையும், பள்ளித் தோழர்களையும் நேரில் சந்திப்பது பெரும்மகிழ்ச்சி தருவதாகக் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.