மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

‘எதிர்க்கட்சிகளை தவறாக சித்திரக்கவே மக்களவை முடிக்கப்பட்டது’: ஆதீர் ரஞ்சன் 

எதிர்க்கட்சிகளை தவறாக சித்திரக்கவே மக்களவை முன்கூட்டியே முடிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதீர் ரஞ்சன் செளத்ரி தெரிவித்துள்ளார்.

News image
ஆதீர் ரஞ்சன் செளத்ரி(கோப்புப்படம்)
Updated On :28 ஜனவரி 2024, 3:53 am

ANI

எதிர்க்கட்சிகளை தவறாக சித்திரக்கவே மக்களவை முன்கூட்டியே முடிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதீர் ரஞ்சன் செளத்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கி நடைபெற்று வந்தன. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவிருந்த கூட்டம் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டன.

இதுகுறித்து ஆதீர் ரஞ்சன் செளத்ரி பேசியது:

“மக்களவை கூட்டம் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டியே முடிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரச்னைகளை விவாதிப்பதற்கு முன்பே, எதிர்க்கட்சிகளை தவறாக சித்திரக்கவே கூட்டம் முடிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை மக்களவையில் இன்று தான் பார்த்தேன். எல்லாம் முடிந்த பிறகு மக்களவைக்கு வருகிறார். ஓபிசி மசோதாவை தவிர பிற மசோதாக்கள் விவாதிக்காமலேயே நிறைவேற்றப்பட்டது. அனைத்து மசோதாக்களும் ஒருசில நிமிடங்களிலேயே நிறைவேற்றப்பட்டன.

பெட்ரோல் விலை உயர்வு, வேளாண் சட்டம், பணவீக்கம், தடுப்பூசி குறித்து விவாதம் நடத்த கோரினோம். ஆனால், எங்கள் கருத்துகளை கேட்காமல், மசோதாக்களை 7 முதல் 8 நிமிடங்களில் நிறைவேற்றிவிட்டனர்.”
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.