பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

மக்களவை 74 மணிநேரம் மட்டுமே செயல்பட்டன: ஓம் பிர்லா

மக்களவை 74 மணிநேரம் 46 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

News image

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா(கோப்புப்படம்)

Updated On :11 ஆகஸ்ட் 2021, 7:26 am

மக்களவை 74 மணிநேரம் 46 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கி நடைபெற்று வந்தன. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவிருந்த கூட்டம் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டன.

இந்நிலையில் கூட்டத்தொடருக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஓம் பிர்லா கூறியது:

“நான் எதிர்பார்த்த அளவு மக்களவை கூட்டத்தொடர் நடைபெறாதது வருத்தமளிக்கிறது. எப்போதும், அதிக அளவிலான மக்கள் பிரச்னைகளை அவையில் விவாதிக்க முயற்சி செய்வேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காலத்திலும் நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட்டன. இரவு நீண்ட நேரம்கூட எம்.பி.க்களின் விவாதங்கள் தொடர்ந்தன. ஆனால் இந்த முறை தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதை தீர்க்க முடியவில்லை.

74 மணிநேரம் 46 நிமிடங்கள் மட்டுமே மக்களவை செயல்பட்டன. 22 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றன. அனைத்துக் கட்சி ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட ஓபிசி மசோதா உள்பட 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அவையின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதமருக்கு நன்றி.

அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் பாரம்பரியம் மற்றும் கண்ணியத்தை பேணவேண்டும். கோஷமிடுவதும் பதாகைகளை ஏந்துவதும் நமது நாடாளுமன்ற பாரம்பரியத்தில் இல்லை. அவையில் விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் கண்ணியம் குறைந்ததில்லை.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.