மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

நாடாளுமன்றம் 14வது நாளாக முடக்கம்: ஆக. 9 வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து மாநிலங்களவை ஆகஸ்ட் 9 காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

News image
நாடாளுமன்றம் 14வது நாளாக முடக்கம்
Updated On :28 ஜனவரி 2024, 3:51 am

ANI

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து இரு அவைகளும் ஆகஸ்ட் 9 காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அமளியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இரு அவைகளின் தலைவர்களும் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், 14வது நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது முதலே பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்கக்கோரி இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அவைகளும் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து அமளி நிலவுவதால், திங்கள்கிழமை காலை 11 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.