ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கோவாவில் கரோனா நெறிமுறைகளுடன் புனித வெள்ளி கொண்டாட்டம்

கோவாவில், பனாஜியில் உள்ள இமாக்குலேட் கான்செப்சன் தேவாலயத்தில் புனித வெள்ளியான இன்று மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 

News image
Updated On :2 ஏப்ரல் 2021, 6:33 am

கோவாவில், பனாஜியில் உள்ள இமாக்குலேட் கான்செப்சன் தேவாலயத்தில் புனித வெள்ளியான இன்று மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 

கரோனா தொற்று நோயையடுத்து, தேவாலயத்திற்குப் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை சோதிக்கப்படுகிறது. மேலும் நுழைவாயிலில் கைப்படாத கைச்சுத்த திரவம் வைக்கப்பட்டுள்ளது. 

தேவாலயத்திற்கு வரும் மக்கள் முகக் கவசங்களை அணிந்தும், சமூக இடைவெளி விதிமுறைகளைக் கடைப்பிடித்தும் வருகின்றனர். 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஏராளமான மக்கள் ஒன்றுகூடி ஆண்டவரைப் பிரார்த்தனை செய்கிறார்கள். 

இதற்கிடையில், கோவாவில் வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 265 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. இதுவரை மொத்த பாதிப்பு 58,304 ஆக அதிகரித்துள்ளது. 

மாநில சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி 1,716 பேர் தற்போது மருத்துவமனையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.