ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனா 3-ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியது. 

News image

கரோனா 3-ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

Updated On :1 ஏப்ரல் 2021, 6:02 am

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

45 வயதிற்கு மேற்பட்டோர் இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கு http://cowin.gov.in மூலம் பதிவு செய்துகொள்ளலாம் அல்லது கரோனா தடுப்பூசி மையத்தையிற்கு சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். 

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வீசிவருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72 ஆயிரம் பேருக்குத் தொற்று பரவியுள்ளது மேலும் 459 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். 

45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியானது 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக இருக்கும். எனவே, பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 

முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் நோயுற்றவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டில் இதுவரை மொத்தம் 6.43 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.