மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜ் பகுதியில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் மிகுந்த வெப்பம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. அங்கு இன்று 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:41 pm

UNI


லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் மிகுந்த வெப்பம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. அங்கு இன்று 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், அதன் பிறகே வெப்பம் தணியும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு வட இந்திய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பம் காரணமாக மதிய நேரத்தில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

லக்னௌவில் இன்று 44 டிகிரி செல்சியஸும், ஜான்ஸி பகுதியில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.