ஹரியாணாவில் ஆயிரத்தை நெருங்குகிறது கரோனா பாதிப்பு
ஹரியாணாவில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


ஹரியாணாவில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை தகவலின்படி,
ஃபரிதாபாத் மாவட்டத்திலிருந்து 9 பேரும், குருக்ஷேத்ராவிலிருந்து 2 பேருக்கும், மகேந்தர்கர் மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்நோய்க்கு 14 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மாநிலத்தில் 86,741 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 991 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 80,799 பேருக்கு கரோனா இல்லை. 4,937 பேரின் மாதிரிகளின் முடிவுக்குக் காத்திருக்கின்றனர். 321 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...