ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உ.பி சாலை விபத்தில் பலியான விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தின், எட்டாவா மாவட்டத்தில் பிரண்ட்ஸ் காலணி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரிகள் ஒன்றோடொன்று மோதியதில் 6 விவசாயிகள் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :20 மே 2020, 6:16 am

உத்தரப் பிரதேசத்தின், எட்டாவா மாவட்டத்தில் பிரண்ட்ஸ் காலணி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரிகள் ஒன்றோடொன்று மோதியதில் 6 விவசாயிகள் பலியாகியுள்ளனர். 

புதன்கிழமை அதிகாலை இந்த சாலை விபத்து சம்பவம் நடந்துள்ளது. விவசாயிகள் அனைவரும் காய்கறிகளை விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த மினி டிரக்கின் மீது வேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில், ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் பலியானார். இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்தார். 

சம்பவ இடத்துக்கு வந்த சிறப்புக் காவல் ஆய்வாளர் ஆகாஷ் தோமர் விபத்து குறித்து தகவல்களைச் சேகரித்து வருகிறார். மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளது. விபத்து குறித்து அப்பகுதியில் விசாரணை நடைபெற்று வருகின்றது. 

இந்த சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.