ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

குவாலியரில் பெயிண்ட் கடையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பெயிண்ட் கடையில் ஏற்பட்ட  தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியாகினர்.

News image

கோப்புப்படம்

Updated On :18 மே 2020, 10:40 am

குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பெயிண்ட் கடையில் ஏற்பட்ட  தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியாகினர்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ரோஷ்நிகார் பகுதியில் ஹரி ஓம் மங்கள் என்பவர் வசித்து வருகிறார். இரண்டு தளங்கள் உள்ள இவரது வீட்டின் தரைத்தளத்தில் பெயிண்ட் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. மேல்தளத்தில் அவர் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

இந்நிலையில் திங்கள் காலையன்று தரைத்தளத்தில் உள்ள பெயிண்ட் கடையில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்தத்தீயானது மளமளவென மேல்தளத்திற்கும் பரவியது. சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் மூன்று வாகனங்களில்       

விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியாகினர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.  

ஆரம்பகட்ட விசாரணையில் தீ விபத்திற்கு மின் கசிவே காரணம் என்று தெரிய வந்திருப்பதாக காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.