இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பத்ரிநாத் கோயில் நடை இன்று மீண்டும் திறப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று காலை திறக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி சார்பில் முதல் பூஜை செய்யப்பட்டது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:38 pm

IANS

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று காலை திறக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி சார்பில் முதல் பூஜை செய்யப்பட்டது. 

ஆறு மாதத்திற்குப் பின்பு கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆனால், கரோனா காரணமாக சுவாமி தரிசனத்திற்குப் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற விஷ்ணு கோயிலான பத்ரிநாத் இன்று அதிகாலை 4.30 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டது. 

ஏப்ரல் மாதம் திறக்கப்படவேண்டிய இந்த திருக்கோயில், கரோனா தொற்று பரவல் காரணமாக, இன்று திறக்கப்பட்டுள்ளது. தலைமை அர்ச்சகர் உள்பட 28 பேர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 

வரலாற்றில் முதன்முறையாகப் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.