விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மும்பை: கரோனா நோயாளிகளுடன் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட உடல்கள் (விடியோ)

மகாராஷ்டிரத்தில் கரோனா வார்டுகளில் உயிரிழக்கும் நபர்களின் உடல்கள் அங்கேயே பிளாஸ்டிக் பைகள் சுற்றப்பட்டு இருப்பது ஏற்கனவே விடியோ மூலம் வலைத்தளங்களில் பரவியது.

News image
Updated On :11 மே 2020, 9:59 am

மும்பை: மகாராஷ்டிரத்தில் கரோனா வார்டுகளில் உயிரிழக்கும் நபர்களின் உடல்கள் அங்கேயே பிளாஸ்டிக் பைகள் சுற்றப்பட்டு இருப்பது ஏற்கனவே விடியோ மூலம் வலைத்தளங்களில் பரவியது.

ஏற்கனவே சியோன் மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கான படுக்கையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு ஆங்காங்கே கிடத்தி வைத்திருப்பதை பாஜக எம்எல்ஏ நிதேஷ் ராணே தனது சுட்டுரையில் வெளியிட்டிருந்தார். 

இது மிக மோசமான செயல் என்று மருத்துவமனை நிர்வாகத்தையும் கண்டித்திருந்தார். 

நோயாளிகளுக்கு பக்கத்திலேயே உயிரிழந்தவர்களின் உடல்களும் கிடப்பது அவர்களது மனநிலையை எவ்வாறு பாதிக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. மகாராஷ்டிர மாநில அரசின் செயல்பாடுகளை விமரிசிக்கும் வகையில் இந்த விடியோவை அவர் வெளியிட்டிருந்தார்.

இந்தியாவிலேயே கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கொண்ட மாநிலமாக இருப்பது மகாராஷ்டிரம். குறிப்பாக மும்பையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் இங்கு பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், பாஜக எம்எல்ஏ நிதேஷ் ராணே இன்று மற்றொரு விடியோவை இணைத்துள்ளார். மும்பையில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் எடுக்கப்பட்டிருக்கிறது இந்த விடியோ மற்றும் புகைப்படங்கள்.

அந்த விடியோவில் உயிரிழந்த நோயாளிகளின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு படுக்கைகளில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகே சில நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

இந்த விடியோ குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.