கேரளத்தில் புதிதாக 3 பேர்; கர்நாடகத்தில் 22 பேருக்கு கரோனா
கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று பேரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று பேரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தெரிவித்திருப்பதாவது, கேரளத்தில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 502 ஆக உள்ளதாகவும், தற்போது 37 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கர்நாடத்தில் இன்று மாலை 5 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 331 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர், 29 பேர் மரணம் அடைந்துவிட்டனர் என்று கர்நாடக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...