ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்த நாள் நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்குமானது: நிர்பயாவின் தந்தை

7 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் திகார் சிறையில் இன்று தூக்கிலிடப்பட்டனர். இந்த நாள் நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்குமானது என்று நிர்பயாவின் தந்தை கூறியுள்ளார்.

News image
Updated On :20 மார்ச் 2020, 5:22 am


புது தில்லி: 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் திகார் சிறையில் இன்று தூக்கிலிடப்பட்டனர். இந்த நாள் நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்குமானது என்று நிர்பயாவின் தந்தை கூறியுள்ளார்.

இது நிர்பயாவுக்கு மட்டுமில்லை, நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்குமான நாள் இது. இன்று நாட்டில் உள்ள அனைத்து மக்களுமே மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள், நிர்பயா சம்பவத்தில் நீதி கிடைத்துவிட்டது என்று. அனைத்து நேரத்திலும் எங்களது வழக்குரைஞர் எங்கள் பக்கம் நின்றார். இறுதியாக நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்று நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்துப் பேசிய நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு முறையீடு செய்யவிருக்கிறோம், இதுபோன்று தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகள் தங்களது தண்டனையை தள்ளிப் போட மீண்டும் மீண்டும் முயலும் சம்பவம் வருங்காலங்களில் நடக்காத வண்ணம் தடை செய்ய கொள்கை முடிவுகளை வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோர உள்ளோம்.

இனி, ஒரு குற்றவாளி மறுசீராய்வு மற்றும் கருணை மனுவை ஒன்றாகவோ அல்லது தனியாகவோ ஒரே நேரத்தில் மட்டுமே தாக்கல் செய்யும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிர்பயாவின் தாய் ஆஷா  தேவி கூறியுள்ளார்.

நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் இன்று காலை 5.30 மணியளவில் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.