நாக்பூரில் பூங்காக்கள், தோட்டங்கள் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படும் என்று நாக்பூர் பெருநகர மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பொது இடங்களில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகின்றது. முன்னதாக நாக்பூரில் அடுத்த 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், புலிகள் சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் இந்த மாத இறுதி வரை மூடப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. அதில், 122 பேர் இந்தியர்கள் என்றும் 24 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


