ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனா எதிரொலி: சீரடி சாய்பாபா ஆலயம் மூடல்

மகாராஷ்டிராவில் புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோயில் இன்று மாலை 3 மணியுடன் மூடப்படுவதாக சாய்பாபா கோயில் அறக்கட்டளை அறிவித்துள்ளது. 

News image
Updated On :17 மார்ச் 2020, 10:01 am

மகாராஷ்டிராவில் புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோயில் இன்று மாலை 3 மணியுடன் மூடப்படுவதாக சாய்பாபா கோயில் அறக்கட்டளை அறிவித்துள்ளது. 

சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்த் தொற்று மேலும் பரவால் இருக்க மத்திய மாநில அரசுகள் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் கூட்டம் சேருவதைத் தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, பிரசித்தி பெற்ற கோயில்களான திருப்பதி ஏழுமலையான் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சைப் பெரிய கோயில் உள்பட தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் கடும் சோதனை செய்யப்பட்ட பிறகே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் கோயில்களுக்கு வருவதை தவிர்க்குமாறும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று மேலும் பரவால் தடுக்க மத்திய சுகாதார அமைச்சகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.  மகாராஷ்டிர மாநிலத்தில் 39 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மகாராஷ்டிராவில் உள்ள புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோயில் மகா ஆரத்தியுடன் இன்று மாலை 3 மணி முதல் மூடப்படும் என்று சீரடி சாயி ட்ரஸ்ட் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே பிரபலமான சித்திவிநாயக், மும்பாதேவி உட்பட பல முக்கிய கோயில்கள் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.