தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

லால்ஜி இறுதிச் சடங்கு, அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ம.பி. அமைச்சருக்கு கரோனா 

மத்தியப் பிரதேசத்தில் ஆளும் ஷிவ்ராஜ் சௌகான் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் உள்பட போபாலில் 215 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
லால்ஜி இறுதிச் சடங்கு, அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ம.பி. அமைச்சருக்கு கரோனா
Updated On :27 ஜனவரி 2024, 4:59 pm

ENS


மத்தியப் பிரதேசத்தில் ஆளும் ஷிவ்ராஜ் சௌகான் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் உள்பட போபாலில் 215 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது கமல்நாத் தலைமையிலான 15 மாத கால ஆட்சியைக் கவிழ்க்க பேருதவி செய்தவர்களில் இந்த அமைச்சரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

இதனிடையே  நேற்று முதல்வர் தலைமையில் போபாலில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அமைச்சருடன் பல்வேறு துறை அமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர்.

இவர் செவ்வாய்க்கிழமை லக்னௌவில் நடைபெற்ற மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனின் இறுதிச் சடங்கிலும் பங்கேற்றிருந்தார். 

மத்தியப் பிரதேசத்தில் ஏற்கனவே 4 பாஜக எம்எல்ஏக்கள், 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பல முன்னாள் அமைச்சர்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

போபாலில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 215 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 4900 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் கரோனாவுக்கு 149 பேர் பலியாகியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் 10 நாள்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.