தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் திருடர்கள்

கரோனா வைரஸ் தொற்றைப் பார்த்து பலரும் அச்சப்படும் நிலையில், அதையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் திருடர்கள்.

News image
கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் திருடர்கள்
Updated On :27 ஜனவரி 2024, 4:57 pm

ENS


துமகுரு: கரோனா வைரஸ் தொற்றைப் பார்த்து பலரும் அச்சப்படும் நிலையில், அதையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் திருடர்கள்.

உதாரணமாக கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியில் குப்பி தாலுகா, கே.ஜி. டெம்பிள் பகுதி கரோனா நோயாளிகள் அதிகம் இருப்பதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள வீடுகளில் வசித்தவர்கள் கரோனா பாதித்து அரசு மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வீடுகளுக்குள் புகுந்து திருடும் சம்பவம் அதிகரித்துள்ளது.

தாயும், மகளும் கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைக்காலம் முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டில் இருந்த 80 ஆயிரம் ரொக்கம், 10 சவரன் தங்க நகைகள் திருடுப் போயிருப்பது அதிர்ச்சியை அளித்தது.

இது ஒரு உதாரணம் மட்டுமே, நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுள்ளது.

இதுபோல கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் பூட்டப்பட்டிருக்கும் வீடுகளை குறிவைத்து திருடும் திருடர்களின் எண்ணிக்கையும், திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்து வருவதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தும் மையங்களுக்குச் செல்லும் மக்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் சென்று திருடும் திருடர்களைப் பிடிப்பதில் தங்களுக்கு சிக்கல் இருப்பதாகக் கூறும் கர்நாடக காவல்துறை, திருட்டுச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.