/

சிஏ தேர்வுகள் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றத்தில் ஐசிஏஐ தகவல்

நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் (ஐசிஏஐ) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

News image

சிஏ தேர்வுகள் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றத்தில் ஐசிஏஐ தகவல்

Updated On :13 ஜூலை 2020, 9:16 am


புது தில்லி: கடந்த மே மாதம் நடைபெற வேண்டிய தேர்வுகள், ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் (ஐசிஏஐ) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஐசிஏஐ நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆஜரான வழக்குரைஞர் ராம்ஜி ஸ்ரீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பதில் மனுவில், சிஏ பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடத்தப்படாது என்றும், அது 2020 நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஏஐயின் பதில் மனுவை ஏற்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.