தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தெலங்கானா ராஜ் பவன் ஊழியர்கள் 48 பேருக்கு தொற்று; தமிழிசைக்கு கரோனா இல்லை

தெலங்கானா ராஜ்பவனில் பணியாற்றும் 48 ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயம், ஆளுநர் தமிழிசைக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
தெலங்கானா ராஜ் பவன் ஊழியர்கள் 48 பேருக்கு தொற்று; தமிழிசைக்கு கரோனா இல்லை
Updated On :27 ஜனவரி 2024, 4:56 pm

ENS


ஹைதராபாத்: தெலங்கானா ராஜ்பவனில் பணியாற்றும் 48 ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயம், ஆளுநர் தமிழிசைக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதித்த ஊழியர்களில், ராஜ் பவனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் 28 காவலர்களும், மூன்றாம் நிலை ஊழியர்கள் 10 பேரும், ராஜ் பவனில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் நான்காம் நிலை ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் அடங்குவர். 

இந்த நிலையில், ராஜ் பவனில் பணியாற்றும் 150 ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பணியில் இருந்த காவலர்கள் அவர்களது பட்டாலியனுக்கே அழைக்கப்பட்டனர். ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தும் அரசின் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது சுட்டுரையில், எனக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலத்தில் இருப்பவர்களும், கரோனா தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்களும் மிக விரைவாக கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். விரைவாக தொற்று கண்டறிந்தால் நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நன்மையாக இருக்கும். பரிசோதனை செய்து கொள்ள அச்சப்படாதீர்கள். நீங்களும் செய்து கொள்ளுங்கள், மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.