தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

முதல் முறை: கரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கரோனா

தில்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் கரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கரோனா
Updated On :27 ஜனவரி 2024, 4:55 pm

ENS


புது தில்லி: தில்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் கரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே முதல் முறையாக கருவில் இருக்கும் சிசுவுக்கு கரோனா பாதிப்பு தாய் மூலம் ஏற்பட்டிருப்பதாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதுவரை, பிறந்த குழந்தைக்கு, கரோனா நோயாளிகள் மூலம்தான் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த குழந்தைகளுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

ஜூன் 11ம் தேதி 24 வயது கர்ப்பிணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதே சமயம், சிகிச்சைக்குப் பிறகு 25ம் தேதி மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டபோதும் கரோனா இருப்பதாகவே வந்தது. பிறகு ஜூலை 7ம் தேதி மீண்டும் பரிசோதித்ததில் கரோனா இல்லை என்று பரிசோதனை முடிவு வந்தது.

ஜூலை 8-ம் தேதி இரவு கர்ப்பிணிக்கு சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மணி நேரத்தில் ஆர்டி-பிசிஆர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை நலமாக இருக்கிறது. குழந்தைக்கு எந்த அறிகுறியும் இல்லை. 48 மணி நேரம் கழித்து மீண்டும் குழந்தைக்கு பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கரோனாவில் இருந்து குணமடைந்த தாய்க்கு, கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் குழந்தை பிறந்திருப்பது இந்த பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவர் கீர்த்தி தெரிவித்துள்ளார். அதே சமயம் குழந்தைக்கு வெளியில் இருந்து கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட எந்த வழியும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.