கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய களையெடுப்பில் பலியான அமர் துபேயின் தந்தை சஞ்சுவ் துபே இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரோடு வந்துள்ளார்.
பிக்ரு கிராமத்தில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்ட சஞ்சீவ் துபே தற்போது உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறையினரால் இன்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட முக்கிய ரௌடி விகாஸ் துபேவின் நெருங்கியக் கூட்டாளியாக இருந்தவர் அமர் துபே. இவர் கடந்த புதன்கிழமை அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமர் துபே சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்க வியாழக்கிழமை பிக்ரு கிராமத்துக்கு காவல்துறையினர் சென்றனர். அப்போதுதான், அமர் துபேவின் தந்தை சஞ்சீவ் துபே உயிரோடு இருக்கும் தகவல் காவல்துறைக்கக் கிடைத்தது. இத்தனை ஆண்டுகளும் சஞ்சீவ் துபே காவல்துறைக்குத் தெரியாமல் ஓரிடத்தில் தலைமறைவாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தனது மகன் இறந்துவிட்டதாகத் தெரிந்ததும், தலைமறைவாக இருந்த சஞ்சீவ் கிராமத்துக்கு வந்ததால், அவர் உயிரோடு இருப்பது தெரிய வந்தது. முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய போது தனக்கு கால் முறிந்து போனதாகவும், ஆனால், விபத்தில் தான் இறந்துவிட்டதாகக் கூறுமாறு குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு, தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும் சஞ்சீவ் கூறியுள்ளார்.
தன் மீது இருக்கும் கொலை முயற்சி உள்பட 12க்கும் மேற்பட்ட வழக்குகளை முடிக்கவே இவ்வாறு நாடகம் ஆடியதாகவும் பழைய ரௌடி சஞ்சீவ் கூறியுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


