பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை எட்டியது; இன்று 15 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 1608 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 25 ஆயிரத்தை எட்டிவிட்டது.

News image

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை எட்டியது; இன்று 15 பேர் பலி

Updated On :10 ஜூலை 2020, 12:10 pm


விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 1608 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 25 ஆயிரத்தை எட்டிவிட்டது.

இன்று காலை 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1,608 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதித்த 15 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு நாள்தோறும் ஆயிரத்தைக் கடந்து வந்த நிலையில், இன்று உச்சபட்சமாக 1,600-ஐ எட்டிவிட்டது.

கரோனா தொற்று பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், இன்று ஆந்திர மாநிலத்தில் 1600 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,422 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 11,936 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 981 பேர் குணமடைந்த நிலையில், ஆந்திரத்தில்  மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை 292 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.