/

தில்லி எய்ம்ஸ் விடுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்த இளம் மருத்துவர்!

தில்லி எய்ம்ஸில் பணிபுரிந்து வந்த இளம் மருத்துவர் ஒருவர் தங்கியிருந்த விடுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்த சம்பவம் நடந்துள்ளது.

News image

தில்லி எய்ம்ஸில் பணிபுரிந்து வந்த இளம் மருத்துவர் ஒருவர் தங்கியிருந்த விடுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்த சம்பவம் நடந்துள்ளது.

Updated On :10 ஜூலை 2020, 2:14 pm

புது தில்லி: தில்லி எய்ம்ஸில் பணிபுரிந்து வந்த இளம் மருத்துவர் ஒருவர் தங்கியிருந்த விடுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்த சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பு வெளியிட்டுள்ள தகவலில்,’ தில்லி எய்ம்ஸ்  மருத்துவமனையில் உறைவிட மருத்துவராகப் பணிபுரிந்து வந்த 25 வயது இளம் மருத்துவர் ஒருவர் தான் தங்கியிருந்த விடுதியின் பத்தாவது மாடியில் இருந்து வெள்ளியன்று கீழே குதித்துள்ளார். அவர் தற்போது எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டு தற்போது ஆபத்தான கட்டத்தில் உள்ளார். அவர் ஏன் குதித்தார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 5-ஆம் தேதியன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 37 வயது பத்திரிக்கையாளர் ஒருவர் இதே மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து, சிகிச்சை பலனில்லாமல் உயரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.