பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஐஐடி-கான்பூர் வளாகத்தில் உதவிப் பேராசிரியர் தற்கொலை

ஐஐடி-கான்பூர் கல்வி நிலையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த பிரமோத் சுப்ரமணியம், கல்வி நிலைய வளாகத்திலேயே புதன்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News image

ஐஐடி-கான்பூர் வளாகத்தில் உதவி பேராசிரியர் தற்கொலை

Updated On :9 ஜூலை 2020, 10:58 am


லக்னௌ: ஐஐடி-கான்பூர் கல்வி நிலையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த பிரமோத் சுப்ரமணியம், கல்வி நிலைய வளாகத்திலேயே புதன்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த 33 வயது நபரான பிரமோத் சுப்ரமணியம், ஐஐடி வளாகத்திலேயே தூக்கிட்டு தறகொலை செய்து கொண்டுள்ளார். 

இது குறித்து தகவல் கிடைத்ததும் கலியான்புர் காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து ஐஐடி கான்பூர் இயக்குநர் பேராசிரியர் அபே கரந்திகர் இது பற்றி தெரிவிக்கையில், ஐஐடி வளாகத்தில் பேராசிரியர் பிரமோத் சுப்ரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது குறித்து மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் வளரும் நட்சத்திரமாக இருந்த ஒரு இளம் பேராசிரியரை இழந்து விட்டோம். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

நைலான் கயிறு கொண்டு பிரமோத் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். தற்கொலைக் குறிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால், அவரது தற்கொலைக்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை.

கரோனா தொற்று காரணமாக ஐஐடி- கான்பூர் கல்வி நிலையம் மூடப்பட்டுள்ளது. வளாகத்துக்குள் வசித்து வந்தவர்கள் மட்டுமே தற்போது அங்கு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.